பெண்கள் , குழந்தைகளுக்கு அரணாக செயல்படுகிறது அரசு – முதலமைச்சர் பழனிசாமி

சோதனைகளை வென்று காட்டியவர் ஜெயலலிதா என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதன் பின் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,பெண்கள் , குழந்தைகளுக்கு அரணாக செயல்படுகிறது அரசு.சோதனைகளை வென்று காட்டியவர் ஜெயலலிதா .கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கல்வி தரத்தை மேம்படுத்த பல கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு .7.5 % இட ஒதுக்கீட்டால் அதிகமானோர் எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர்.முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் தொழில்துறையில் தமிழகத்தை தலைநிமிர செய்தது அதிமுக அரசு என்று பேசியுள்ளார்.