சிட்னியில் வென்று தொடரை கைப்பற்றுவது தான் குறிக்கோள்…..!விராட் கோலி

அடுத்த டெஸ்டில் இந்திய அணி கடுமையாக போராடவேண்டி இருக்கும் என்று  இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு சுருண்டது. 292 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
இதனைதொடர்ந்து, 399 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை விளையாடியது. இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 261 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனையடுத்து இந்திய அணி 137 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இதன் பின்னர் வெற்றி குறித்தது இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேசுகையில்,  சிட்னியில் வென்று தொடரை கைப்பற்றுவது தான் குறிக்கோள் ஆகும். 70 ஆண்டுகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றதில்லை அதை நிறைவெற்ற கடுமையாக போராடவேண்டி இருக்கும் என்று  இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Leave a Comment