படிக்கும் அறையை படுக்கை அறையாக மாற்றிய சிறுமி – அப்பாவாகிய 17 வயது சிறுவன்!

படிக்கும் அறையை படுக்கை அறையாக மாற்றிய சிறுமி அப்பாவாகிய 17 வயது சிறுவன் போக்ஸோ சட்டத்தில் கைது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட 17 வயதான சிறுவன் கோவையில் உள்ள கோணவாய்க்கால் பாளையம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாகி உள்ளது. சிறுவர்களாக இருந்தாலும் இருவரும் காதலித்து வந்துள்ளனர், மாணவியின் பெற்றோர் அந்தப் பெண் பத்தாம் வகுப்பு படிப்பதால் அவள் படிப்பதற்கு என்று தனி அறை ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

நிலையில் ஏற்கனவே காதலித்து வந்த சிறுமி தனது காதலனுடன் இந்த அறைக்குள் அவ்வப்போது பேசுவது வழக்கம். அதுபோல மாணவன் ஒருமுறை இதை சாதகமாக பயன்படுத்தி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணிடம் பாலியல் உறவு வைத்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார் இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தங்கள் மகளை கண்டித்து காட்பாடியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். இருப்பினும் அந்த சிறுவன் தொடர்ந்து அந்த சிறுமிக்கு செல்போன் மூலமாக தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பதை அறிந்த பெற்றோர்கள் கோவை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து விசாரித்த காவல்துறையினர் அந்த 17 வயது சிறுவனை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.

author avatar
Rebekal