தொடரைக் கைப்பற்றுமா இந்தியா.? இன்று ஆஸ்திரேலியாவுடன் 4வது போட்டி.!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போதுவரை 3 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில், இன்று நான்காவது போட்டியானது நடைபெறவுள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இப்போது நான்காவது டி20 போட்டி ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது.

ரோஹித் சர்மா கோலிக்கு ஓய்வு.. தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி அறிவிப்பு..!

இந்த தொடரில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து வருகின்றனர். ஆஸ்திரேலியா அணியும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என காட்டி கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் அபாரமாக விளையாடி வருகின்றனர்.

அந்த வகையில் இரு அணியும் வெற்றி பெற கடுமையாக விளையாடும். குறிப்பாக இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், இத்தொடரைக் கைப்பற்றிவிடும். ஆனால், இன்று வெற்றி பெறவில்லை என்றால் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும். ஏனெனில் ஆஸ்திரேலியா ஏற்கனவே 1 புள்ளியுடன் உள்ளது.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடர் 2-2 என சமமாகிவிடும். இதனால் கடைசி போட்டியில் வெற்றியாளரைத் தீர்மானிக்கப்படுவார். எனவே இந்தியா இந்த போட்டியில் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தொடருக்கு ஆயத்தம்…அறுவை சிகிச்சை செய்து கொண்ட பென் ஸ்டோக்ஸ்!

உத்தேச வீரர்கள்

இந்தியா

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (W), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (C), ரின்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா/அவேஷ் கான், ரவி பிஷ்னோய்

ஆஸ்திரேலியா

மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி, மேத்யூ வேட் (C & W), கிறிஸ் கிரீன், ஜேசன் பெஹ்ரென்டோர்ஃப், நாதன் எல்லிஸ், தன்வீர் சங்கா, கேன் ரிச்சர்ட்சன்

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.