தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலா சொகுசு கப்பல் இன்று தொடக்கம்..!

தி எம்ப்ரஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

கடந்த மாதம் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் விளக்கம் அளித்தார். அப்போது சென்னையில் இருந்து ஜூன் மாதம் சொகுசு கப்பல் மூலமாக கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் முதன்முறையாக கார்டிலியா நிறுவனம் அறிமுகப்படுத்தும் தி எம்ப்ரஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment