சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து- கமல்ஹாசன்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில்,தாய் தமிழ்நாடு நோய்வாய்ப்பட்டுள்ளது. பிள்ளைகளாகிய நீங்கள் தான் அதை சரிசெய்ய வேண்டும் .ஆரத்தி தட்டில் காசு போடுவதைவிட மக்களை மேம்பாடு அடையச்செய்ய வேண்டும்.

தீவிரவாதம் இருதரப்பிலும் உள்ளது. உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர் பெயர் நாதுராம் கோட்சே .

இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும். தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment