பெற்ற மகளுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை..! 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு..!

புதுக்கோட்டையில் பெற்ற மக்களுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை தணடனை. 

புதுக்கோட்டை மாவட்டத்தில், தனது 7 வயது மகளுக்கு, குழந்தையின் தந்தையே பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 8 மாதங்களில் இந்த குற்றசாட்டு தொடர்பான விசாரணை முடிக்கப்பட்டு, குற்றசாட்டு உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, குற்றவாளியான குழந்தையின் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, குற்றவாளி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.