கனமழை எதிரொலி : நீலகிரியில் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

இன்று நீலகிரி மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தேனி,திண்டுக்கல்,கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது  என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது.எனவே நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக  பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார்.