மு.க.ஸ்டாலின் காணும் கனவு இறுதி வரை கனவாகவே இருக்கும் : அன்புமணி ராமதாஸ்

  • அதிமுக-வின் கூட்டணி கட்சியான பாமக சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் அன்புமணி போட்டியிடுகிறார்.
  • ஸ்டாலின்  கனவுக்கு முதல் அடி தருமபுரி மக்களவை மற்றும் இடைத் தேர்தல் தொகுதிகளில் விழப்போகிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

அதிமுக-வின் கூட்டணி கட்சியான பாமக சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் அன்புமணி போட்டியிடுகிறார். திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று தருமபுரி அதிமுக அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார். நாம் அமைத்திருப்பது வெற்றிக் கூட்டணி. இந்த மெகா கூட்டணி 40 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும், ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் அதிமுக, பாமக கூட்டணி அமைந்தபோதெல்லாம் அதை இயற்கையான கூட்டணி என்று குறிப்பிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், அதிமுக – பாமக கூட்டணியை விமர்சித்து சென்னையில் இருந்தபடி ஒருவர் ஆணவமாக பேசி வருகிறார். ஸ்டாலின் ஏதேதோ கனவில் உள்ளார், அவர் கனவுக்கு முதல் அடி தருமபுரி மக்களவை மற்றும் இடைத் தேர்தல் தொகுதிகளில் விழப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment