திராவிட இயக்கத்தை எதிரி தோன்றினால் தான் அழிக்க முடியும்…! அதுவும் தோன்ற முடியாது…! – அமைச்சர் துரைமுருகன்

திராவிட இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது. எதிரி தோன்றினால்தான் அளிக்க முடியும். அதுவும் தோன்ற முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்றும், அந்த நாளில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பிற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், கலைஞரின் அதே சுயமரியாதை உணர்வும் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வாசிக்கும்போது தெரிந்தது. திராவிட இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது. எதிரி தோன்றினால்தான் அளிக்க முடியும். அதுவும் தோன்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.