குழந்தையை தரையில் அடித்து கொன்ற கொடூர தாய்….!! பாலூட்டும் போது மூச்சு திணறி இறந்ததாக நாடகம்…!!!

சென்னை, காசிமேடு பகுதியாயி சேர்ந்த வர சத்யராஜ். இவரது மனைவி பெயர் செலஸ்டின். இவ்ரகள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சத்யராஜ் ஒரு கட்டிட தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. மீண்டும் ஒரு பெண்குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், பிறந்து 18 நாட்களே ஆன இந்த குழந்தைக்கு பாலூட்டும் போது இறந்து விட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து போலீசார் குழந்தையை ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தைக்கு பின்தலையில் பலத்த அடி பட்டு தான் இருந்துள்ளதாக தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் செலஸ்டினை கைது செய்து விசாரித்தனர். அவர் குழந்தையை தரையை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். செலஸ்டின் கொடுத்த வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளதாவது : அவர் தனது கணவர் சத்யராஜுடன் கட்டிட வேலைக்கு சென்றிருந்த போது அவருக்கு ஜெயந்தி என்ற வேறொரு பெண்ணுடன் திருமணமாகி 3 வயதில் குழந்தை உள்ளது தெரிய வந்தது.

இவர் இப்படி வேறொரு பெண்ணுடன் திருமணமாகி அவருக்கு குழந்தை இருப்பது, எனது வாழ்க்கையில் அது வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் எனது முதல் குழந்தையாவே வளர்க்கமுடியாமல் கஷ்டப்படுவதால், இந்த குழந்தையையும் வழக்க முடியாது என குழந்தையை தரையில் தூக்கி அடித்தேன். குழந்தை சிறிது நேரத்தில் துடிதுடித்து இழந்தது. உடனே குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து போலீசார் செலஸ்டினை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment