கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.!

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64 பேரில் 2  கர்ப்பிணி பெண்கள்.இதில் ஒரு  கர்ப்பிணி பெண் பெருந்துறையைச் சேர்ந்தவர் இவர்அதே பகுதியில் உள்ளஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று அந்த கர்ப்பிணி ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த  குழந்தையும் , தாயும்,  நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது குழந்தையை தனிமையில் வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும், குழந்தைக்கு கரோனா தொற்று இருக்குமா..? என்பது பற்றி  கண்டறிய 3 வாரங்கள் தேவை என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

author avatar
murugan