பாப்பாபட்டி செல்லும் வழியில் விவசாயிகளை சந்தித்த முதல்வர்…!

பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களிடம் வயலில் இறங்கி, முதல்வர் குறைகளை கேட்டார்.

காந்தி ஜெயந்தியான இன்று, பல இடங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில்,  கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து கூட்டம் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெறும், கிராம சபை கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களிடம் வயலில் இறங்கி, முதல்வர் குறைகளை கேட்டார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.