சென்னையில் அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
2021 பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.1.98 கோடி பரிசுத் தொகையை முதல்வர் வழங்கினார். விளையாட்டுத்துறை மற்றும் மேம்பாட்டிற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், முதலமைச்சரின் முயற்சியில் தான் செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடத்தப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.