மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375.17 புள்ளிகள் சரிந்து, 54,179.49 புள்ளிகளில் வர்த்தகம்!!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 259.77 புள்ளிகள் சரிந்து, 54,294.89 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் உயர்வுடன் துவங்கினாலும், முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யப்பட்ட காரணத்தால்  தற்போது சரிவுக்கு தள்ளப்பட்டது. அதன்படி, சென்செக்ஸ் குறியீடு 375.17 புள்ளிகள் குறைந்து, 54,179.49 புள்ளிகளை எட்டியுள்ளது.

இதுபோன்று, நிஃப்டி குறியீடு 82.85 புள்ளிகள் குறைந்து, 16,197.90 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. முதலீட்டாளர்கள் லாப நோக்கத்திற்காக பங்குகளை விற்பனை செய்யப்பட்டும் காரணத்தால் முக்கிய நிறுவனங்களும் சரிவை சந்தித்துள்ளது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் 5 நிறுவனங்கள் மட்டுமே உயர்வுடன் காணப்படுகிறது.

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 39.71 புள்ளிகள் அதிகரித்து, 54,594.37 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 5.10 புள்ளிகள் அதிகரித்து, 16,285.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதில் 1099 பங்குகள் ஏற்றத்திலும், 760 பங்குகள் சரிவிலும், 84 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று ஏற்றம் கண்டு, 74.38 ரூபாயாக காணப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்