இணைக்க மறுத்தால் இம்மண்ணில் நோட்டாவை தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம் -மு.க.ஸ்டாலின் ட்வீட்

நீக்கியவற்றை பாடத்தில் இணைக்க மறுத்தால் இம்மண்ணில் நோட்டாவை தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதன் விளைவாக பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்டு இருந்தது.எனவே இதனை கருத்தில் கொண்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதாவது,மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ,மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் 30 %  பாடங்கள் குறைக்கப்படுவதற்காக அறிவிக்கப்பட்டது.ஆனால் இதை தமிழர்களின் வரலாறு,கலாச்சாரம் உள்ளிட்டவை நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இராணுவ உடையில் திருக்குறளை சுட்டும் பிரதமர் ‘ராணுவத்தில் தமிழர் பங்கு’ என்ற சிபிஎஸ்இ  பாடத்தை நீக்குகிறார். தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சி-ன் எல்லைப் போராட்டம் ஆகியவற்றை மீண்டும் இணைக்க மறுத்தால் இம்மண்ணில் நோட்டா வை தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.