பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சர்ச்சை நடிகை மீது மீண்டும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

நடிகை மீரா மிதுன் பிரபலமான நடிகை மட்டுமல்லாது, வடிவழகியுமாவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், தொழிலதிபர் ஜோ மைக்கேல் ஜாக்சன் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் இவர் மீது புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.