கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் விருப்பங்கள் என்ற வாதம் அபத்தமானது – ராகுல்காந்தி

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில், தேவைகள், விருப்பங்கள் என்ற வாதம் அபத்தமானது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போட தொடங்கினர். அதனை தொடர்ந்து, மார்ச் 1-ம் தேதி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதனை தொடர்ந்து, ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த  பதிவில், ‘கொரோனா தடுப்பூசி விவகாரத்தில், தேவைகள், விருப்பங்கள் என்ற வாதம் அபத்தமானது. ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வாழ்க்கைக்கான வாய்ப்பை பெற தகுதியானவர்கள் என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.