புல்வாமா சம்பவம் மீண்டும் நடக்காமலிருக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது -மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

  • ஜம்மு-காஷ்மீரில் உள்ள  பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.
  • புல்வாமா சம்பவம் மீண்டும் நடக்காமலிருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றது என்று  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், புல்வாமா சம்பவம் மீண்டும் நடக்காமலிருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து கூடுதல் தகவல்களை சேகரித்து வருகிறோம் என்று  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment