16 அடி நீளம் கொண்ட திமிங்கலம் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்

  • மபினி நகரில் உள்ள கடலில் சுமார் 16 அடி நீளம் கொண்ட திமிங்கலம் இறந்தது  கரை ஒதுங்கியது.
  • சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் திமிங்கலத்தின் வயிற்றில் அரிசி பைகள் உள்பட சுமார் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி ஆனார்கள்.
பிலிப்பைன்சின் மபினி நகரில் உள்ள கடலில் சுமார் 16 அடி நீளம் கொண்ட திமிங்கலம் இறந்தது  கரை ஒதுங்கியது. அந்த திமிங்கலத்தை சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் திமிங்கலத்தின் வயிற்றில் அரிசி பைகள் உள்பட சுமார் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி ஆனார்கள். பிளாஸ்டிக் கழிவுகள் வயிற்றில் தேங்கியதால்  இரை உண்ண முடியாமல் திமிங்கலம் நோய்வாய்பட்டு இறந்ததாக கூறினார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தாய்லாந்தில் இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து  80 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெருங்கடல் பகுதியில் சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய 5 ஆசிய நாடுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் பிரச்சினையாக உள்ளது.
author avatar
murugan

Leave a Comment