12 நாட்கள் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் -காவல் ஆணையர் விஸ்வநாதன்

12 நாட்கள் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தான் கொரோனா தாக்கம் தினமும்  அதிகமாக உள்ளது.

 இதனால், சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை  12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே முழு முடக்கம் அமல்படுத்தப்பட்ட சென்னை முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  வாலாஜா சாலையில் வாகன சோதனையை காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு செய்து வருகிறார். தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது.இந்நிலையில் காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில்,சென்னையில் 12 நாட்கள் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும். வெளியில் வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் .அத்தியாவசியப் பொருட்களை வாங்க வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.