சென்னை திருவேற்காட்டில் பாமகவின் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், காவிரி டெல்டா மாவட்டங்களை, சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் வரலாற்றுமிக்க இந்த சட்டத்தின் போது, சட்டமன்றத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.