டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற ஹிட்மேன் பேட்டிங் தேர்வு..!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, 2-வது மற்றும் கடைசி  டெஸ்ட்போட்டி இன்று மதியம் 2 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள்: 

மயங்க் அகர்வால், ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஹனுமா விஹாரி, விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி,  பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி வீரர்கள்:

திமுத் கருணாரத்ன (கேப்டன்), லஹிரு திரிமான்ன, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, நிரோஷன் டிக்வெல்ல (விக்கெட் கீப்பர்), சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய, விஷ்வ பெர்னாண்டோ, பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

author avatar
murugan