உ.பி யில் பயங்கரம் – துப்பாக்கி காட்டி வாகனம் சோதனை செய்யும் காவலர்கள்!

உத்திரபிரேதச மாநிலம் பாடான் நகரில் வாகன சோதனை செய்யும் காவலர்கள் வாகனத்தில் வருவோரை துப்பாக்கி காட்டி நிறுத்தி பின்னர் சோதனை செய்துள்ளனர். காவலர்கள்  வாகன சோதனை நடத்துவது தெரிந்தாலே எப்படியாவது அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று குறுக்கு வழியில் செல்வது  இல்லையெனில் அதி வேகமாக சென்று தப்பித்து விடுவது வழக்கம். ஆனால் உத்திரபிரதேச மாநிலத்தில் சோதனைக்காக நிற்கும் காவலர்கள் வாகனத்தில் வருவோரை துப்பாக்கி காட்டி நிறுத்துகிறார்கள் .
ஆண் ,பெண், என்று வித்யாசம் பாராமல் அனைவரையும் துப்பாக்கி முனையில் சோதனை செய்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் பீதியடைந்துள்ளனர். காவல்துறையின் இந்த செயல் அதிர்ச்சியளிப்பதாகவும், பெரும் பயத்தை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து கருத்து கூறியுள்ள, DIG சோதனை செய்யும் பகுதியானது அதிகம் குற்றம் நடக்கும் பகுதி என்பதால் காவலர்கள் இவ்வாறு செய்கின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.