பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வு : 6 – 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வெழுத உள்ள மாணவர்கள் வரும் 6 – 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.

பத்தாம்  வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பாக தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வெழுத உள்ள மாணவர்கள் வரும் 6 – 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் .பள்ளிகளில் படித்து பொதுத்தேர்வெழுதி தோல்வியுற்ற மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறுகிறது.

Leave a Comment