முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் சந்திப்பு

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசியுள்ளார்.

நேற்று காலை தமிழகம் வருகை தந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார். ஸ்ரீரங்கம் கோயிலில் அவருக்கு கோயில் யானை மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த கோவிலில் அவர் குடும்பத்தோடு வழிபாடு நடத்தி சிறப்பு பூஜை செய்தார்.

இந்நிலையில், தற்போது, சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, ஹைதராபாத்தில், மார்ச் மாதம் நாராயணசாமி கோவில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், இந்த விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.