சென்னையில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 10 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜனவரி 22-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது.ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.7-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
பின்னர் ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கூறுகையில், சிறையில் இருக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை விடுவிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுவோரிடம் காவல்துறை கடுமையாக நடந்துகொள்கிறது .பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்.ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திதீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் . அரசின் நிலைப்பாட்டால் தான் போராட்டம் தொடர்கிறது என்று ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிலையில் முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ,சென்னையில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 10 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் . பணிக்கு திரும்பாவிட்டால் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படுவர்.சென்னையில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக 2000 பேர் காத்து இருக்கின்றனர் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…
Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…
Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…
Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: அரிசி =1 டம்ளர் எண்ணெய்=4 ஸ்பூன் கடலைப்பருப்பு =1…
C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர்…
Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…