தமிழ்நாட்டில் 3 நாட்கள் டாஸ்மாக் மூடல்.! வெளியான உத்தரவு.!

TASMAC : தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுக்க ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் புதுச்சேரி தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வழக்கமாக தேர்தல் நடைபெறும் நாளன்று மதுபான கடைகள் மூடப்படும். அதே போல இந்த முறையும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, தேர்தல் நாள் மற்றும் அதற்கு முந்தைய நாட்கள் ஏப்ரல் 17, 18 ஆகிய நாட்கள் சேர்த்து மொத்தம் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் தமிழகத்தில் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், 7 கட்ட மக்களவை தேர்தல் முடிந்து, ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியிடப்படும் நாளன்றும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.