தமிழகத்தில் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர்.!

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,824-ஆக உள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இன்று மட்டுமே கொரோனா தொற்றால் 526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 6,535 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை இன்று அதிகபட்சமாக 219-ஆக உள்ளது. இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து 1,824 பேர் குணமாகி வீடுதிரும்பியுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் தற்போது வரையில் 4,664 பேர் இருக்கின்றனர் என தற்போது தமிழக சுகாதாரதுறை தகவல் வெளியிட்டுள்ளது.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.