எங்களுக்கு திருப்பி கொடுங்க – ஸ்டாலின் அதிரடி

  கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற ஆவண செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற காந்திகிராம பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ” கல்வி மட்டுமே யாராலும், எப்போதும் பறித்துக் கொள்ள முடியாத சொத்து என்றும்  தரமான கல்வியை வழங்குவது மாநில அரசின் கடமை, அதை  மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றும் பேசினார்.மேலும் அவர்  அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது கல்வி மாநில பட்டியலில் இருந்ததையும் , எமர்ஜென்சி காலத்தில் பொது பட்டியலுக்கு மாற்ற பட்டத்தையும் சுட்டிக்காட்டி, மீண்டும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற ஆவண செய்யும்படி மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.

கல்வி மாநில பட்டியலில் வரும் பட்சத்தில்,கல்வி குறித்த முக்கிய முடிவுகளை மாநில அரசுகளே எடுத்துகொள்ள முடியும்.

author avatar
Aravinth Paraman

Leave a Comment