இன்று தமிழக சட்டப்பேரவைக் கூடுகிறது

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம், கடந்த மார்ச் மாதம் 23- ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று முதல் 3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

கொரோனா பரவல் காரணமாக, தமிழக சட்டசபையில் சமூக இடைவெளியை பின்பற்ற போதிய இடமில்லாத நிலையில், கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதற்காக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எதிர்கட்சியினர் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் மூன்று அதிமுக எம்.எல்.ஏ.களுக்கு கொரோனா தொற்று உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் கொரோனா குறித்தும், மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்தும், புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வால் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்யும் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்த  எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

author avatar
murugan