கர்நாடகாவில் ஒரே நாளில் 9,894 பேருக்கு கொரோனா உறுதி.!

கர்நாடகாவில் நேற்று 9,894 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 2 வாரமாக 9-ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. அந்த வகையில், நேற்று 9,894பேருக்கு கொரோனா. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 4,59,445ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் 8,402 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ். இதுவரை 3,52,958 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் 99,203 பேர் சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில்,நேற்று ஒரே நாளில் 104 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7,265 ஆக உயர்ந்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.