நாளை தமிழகம் வருகிறது மத்தியக்குழு

கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் நாளை தமிழகம் வருகிறது மத்தியக்குழு .

தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நேற்று  3,827  பேருக்கு கொரோனா வைரஸ்  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,14,978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே  விமானம் மூலம் நாளை தமிழகம் வருகிறது மத்தியக்குழு .இந்த குழு முதலமைச்சர் பழனிசாமி , சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , சுகாதாரத்துறை செயலருடன் ஆலோசனை நடத்த உள்ளது. மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான குழு வருகிறது.