ராயபுரத்தில் 8,981 பேருக்கு கொரோனா.!

ராயபுரத்தில்  கொரோனா பாதிப்பு 8,981 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் நேற்று ஒரே நாளில்1,747 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் மொத்த எண்ணிக்கை 70,017 ஆக உயர்ந்தது மேலும் இதுவரை சென்னையில் 44,882 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 24,052 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், 1082 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,981ஆக உயர்ந்துள்ளது. எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதை மண்டல வாரியாக வெளியிட்டது மாநகராட்சி.

கோடம்பாக்கம்- 7,540 பேர் திருவிக நகர்-5,693 பேர், வளசரவாக்கம்- 3,390 பேர் அண்ணாநகரில் 7,735 பேர் தண்டையார்பேட்டை 7,762 பேர், தேனாம்பேட்டை 7,775 பேர், திருவொற்றியூர் 2,705 பேருக்கும், மணலி 1,296  பேர் அம்பத்தூர் 3,176 பேர்மேலும் மாதவரம் 2,257 பேர், ஆலந்தூர் 1,902, அடையாறு 4,435 பேர் பெருங்குடி 1,826 பேர் சோழிங்கநல்லூர் 1,458 பெருக்கும் கொரோனோ.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.