சற்று முன்…தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12  மீனவர்கள் விடுதலை – நீதிமன்றம் உத்தரவு!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12  மீனவர்கள் விடுதலை.

தமிழகத்தின் மயிலாடுதுறையை சேர்ந்த ஏழு மீனவர்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஐந்து மீனவர்கள் உட்பட 12 மீனவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.இதனையடுத்து,இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும்,அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வலியுறுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி இருந்தார்.

அவரைத் தொடர்ந்து,ஓபிஎஸ் அவர்களும்,கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில்,எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி கிரசாந்த் பொன்னுத்துரை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Comment