பாஜக அலையில் தமிழகம் மட்டும் தப்பித்துக்கொள்ள முடியாது – ஹெச் ராஜா..!

உபி, கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் நேற்று நடைப்பெற்றது. இந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்ற  உபி, கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு மட்டும் தப்பிக்க முடியாது:

இதைதொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதையே உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.  நாடு முழுவதும் பாஜக அலை அடிக்கிறது. அதில் தமிழ்நாடு மட்டும் தப்பித்துக்கொள்ள முடியாது என கூறினார்.

முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்ததால் முஸ்லீம் பெண்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றினால்தான் காங்கிரசுக்கு இனி எதிர்காலம் உள்ளது

author avatar
murugan