எந்த இடத்திலும் தமிழை விட்டு கொடுத்ததில்லை – அமைச்சர் அன்பில் மகேஷ்

கடந்த ஓராண்டில் 4.1% – மாக இருந்த வருவாய் பற்றாக்குறையை, 3.8-ஆக குறைத்து சாதனை படைத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

திருச்சி தெற்கு மாவட்டம், மணப்பாறை ஒன்றியம் புத்தா நத்தம் ஊராட்சி, கலைஞர் திடலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஓராண்டு நிறைவு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய கழகச் செயலாளர் C.இராமசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் உரையாற்றிய, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், கடந்த ஓராண்டில் 4.1% – மாக இருந்த வருவாய் பற்றாக்குறையை, 3.8-ஆக குறைத்து சாதனை படைத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், நாங்கள் தமிழை எந்த இடத்திலும் வீட்டுக் கொடுத்ததில்லை என்றும் அந்த நிகழ்வில் பேசியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment