போதை பொருள் விவகாரம்: விசாரணைக்கு ஆஜரானார் இயக்குனர் அமீர்.!

Ameer

Ameer sultan: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட இயக்குனர் அமீர் டெல்லி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். டெல்லியில் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்திய நிலையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் … Read more

ஜாபர் சாதிக் விவகாரம்: விசாரணைக்கு தயாராக இருக்கிறேன் – சர்ச்சைக்கு அமீர் விளக்கம்.!

ameer-webg

Ameer : தயாரிப்பாளர் ஜாபர் கைது தொடர்பான எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். சமீபத்தில், போதைப் பொருள் வழக்கில் தொடர்புடையதாக கூறி, தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது குற்றச்சாட்டு வைப்பட்டுள்ளது. READ MORE – பாலா சார் என்னை டார்ச்சர் பண்ணல…அந்தர் பல்டி அடித்த மலையாள நடிகை.! இதனை தொடர்ந்து, அந்த வழக்கில் ஜாபர் சாதிக் உடன் தன்னை தொடர்புப்படுத்தி எழுந்த விமர்சனங்களுக்கு இயக்குனர் அமீர் ஏற்கனவே தனது அறிக்கை விளக்கம் … Read more

மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் பருத்திவீரன்?

Paruthiveeran Re-Release

சினிமா துறையில் தற்போது ட்ரெண்டிங்கான விஷயங்களில் ஒன்று ஆரம்ப காலகட்டத்தில் வெளியான படங்கள் தற்போது ரிலீஸ் செய்யப்படுவது தான்.  குறிப்பாக 3, மயக்கம் என்ன, வாரணம் ஆயிரம், காக்க காக்க,  உள்ளிட்ட படங்கள் எல்லாம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. ரீ-ரிலீஸ் செய்யப்படுவதால் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த படங்களை மீண்டும் ரீ-ரிலீஸ்  செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பருத்திவீரன் திரைப்படம் … Read more

உங்க கிரிமினல் தனத்தால் உண்மைகள் வெளிவரப்போகிறது! ஞானவேல் ராஜாவை எச்சரித்த எஸ்.ஆர்.பிரபாகரன்!

sr prabhakaran about paruthiveeranissue

ஞானவேல் ராஜா அமீர் பற்றி பேசிய விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், பலரும் இன்னும் அமீருக்கு ஆதரவாக பேசி அறிக்கை வெளியீட்டு கொண்டு வருகிறார்கள். அமீர் பற்றி பேசியதற்கு ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியீட்டு இருந்தாலும் கூட அவர் சரியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் அறிக்கை வெளியீட்டு இருந்தார்கள். அப்படி இருந்தும் இன்னும் இந்த விவகாரம் தொடர்பாக ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்காமல் இருந்து வருகிறார். இதனால் பலரும் … Read more

ஆதரவளித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! அமீர் அறிக்கை!

Suriya and Ameer

இயக்குனர் அமீர் தமிழ் சினிமாவில் சூர்யாவை வைத்து ‘மௌனம் பேசியதே’ படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படம் இதே தினத்தில் (டிசம்பர் 13)-ஆம் தேதி தான் 2002-ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் த்ரிஷா, நந்தா துரைராஜ், அஞ்சு மகேந்திரன், நேஹா பென்ட்சே, விதார்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில், இந்த படம் வெளியாகி இன்றுடன் … Read more

ராஜனாக நடித்துள்ள அமீர்! மாயவலை படத்தின் டீசர் வெளியீடு!

Maayvalai Teaser

இயக்குனராக ஒரு பக்கம் கலக்கி வந்த இயக்குனர் அமீர் நடிகராகவும் ஒரு பக்கம் கலக்கி கொண்டு வருகிறார். குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் ராஜன் எனும் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருப்பார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் வழங்கும் மாயவலை படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார். இந்த மாயவலை திரைப்படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். படத்தில் இயக்குனர் அமீருடன் சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் … Read more

நான் பெற விரும்புவது யாசகம் அல்ல என்னுடைய உரிமையை! இயக்குனர் அமீர் அறிக்கை!

ameer about paruthiveeran issue

பருத்திவீரன் சர்ச்சை இன்னும் முடியாமல் இருக்கும் நிலையில், இயக்குனர் அமீர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பருத்திவீரன் சர்ச்சை  பற்றிய உண்மை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதனை அறிக்கையாகவும் வெளியீட்டு இருக்கிறார்.  இது குறித்து பேசிய இயக்குனர் அமீர் ” தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் அவர்களுக்கு இந்த விஷயத்தை தெரிவித்துக்கொள்ள இந்த நேரத்தில் நான் விரும்புகிறேன். சென்னையில், கனமழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் துயரத்துக்கு ஆளாகி, முடங்கிப்போயுள்ள இந்த … Read more

கோபத்தில் தான் அந்த முடிவு எடுத்தேன்! இயக்குனர் அமீர் பேச்சு!

director ameer

இயக்குனர் அமீர் தமிழ் சினிமாவில் பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே உள்ளிட்ட படங்களை இயக்கி தான் ஒரு தலை சிறந்த இயக்குனர் என்பதனை நிரூபித்துவிட்டார். அதே சமயம் யோகி, ஆதிபகவன், வடசென்னை, மாறன் ஆகிய படங்களில் நடித்து தான் ஒரு நல்ல நடிகர் என்பதனையும் காட்டிவிட்டார். இதில் அவர் வடசென்னை படத்தில் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம். இப்படி நடிகராகவும் ஒரு பக்கம் கலக்கி கொண்டு இருக்கும் இயக்குனர் அமீர் தற்போது … Read more

பாலா கூட முரண்பாடு.. பிரிவுக்கு காரணம் இது தான்! மனம் திறந்த இயக்குனர் அமீர்!

Directors bala and ameer

மௌனம் பேசியதே, பருத்தி வீரன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அமீர். இவர் இயக்குனர் பாலாவிடம் நந்தா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பிறகு தான் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. இருவரும் படங்களை இயக்குவதற்கு முன்பே சென்னைக்கு ஒன்றாக தான் சினிமாவில் படங்களை இயக்க வந்தார்கள். அதில் இயக்குனர் பாலா குறுகிய காலத்திலே நல்ல படங்களை எடுத்து முன்னணி இயக்குனராக வளர்ந்துவிட்டார். அமீர் மௌனம் பேசியதே படத்திற்கு … Read more

எனக்கு சூர்யாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை! மனம் திறந்த இயக்குனர் அமீர்!

ameer and suriya

பருத்திவீரன் படம் இந்த அளவிற்கு பெரிய சர்ச்சையாக வெடிக்கும் என்று தெரியாமல் அமீர் பற்றி ஞானவேல் ராஜா பேசியது திரையுலகில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் ஒரு பக்கம் ஓடி கொண்டு இருக்கும் நிலையில், மௌனம் பேசியதே படத்தில் இருந்தே சூர்யாவுக்கும் இயக்குனர் அமீருக்கு இடையே பிரச்சனை இருப்பதாக செய்திகள் உலாவி கொண்டு இருந்தது. ஆனால், எங்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்று இயக்குனர் அமீர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து … Read more