இரட்டைவேடம் போட்டதால், அவர்களை நம்ப மக்கள் தயாராக இல்லை – டிடிவி தினகரன்

ஸ்டெர்லைடில் ஆக்சிஜன் மட்டும் அடுத்த 4 மாதங்களுக்கு நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் அறிக்கை. ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளித்திருக்கும் சூழலில், அந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மட்டுமின்றி உயர்நீதிமன்றமும் கண்காணிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை வெளி மாநிலங்களுக்கு அனுப்பாமல் இங்குள்ள நோயாளிகளுக்கு … Read more

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் – டிடிவி தினகரன்

எனது மகளின் திருமணம் முடிந்த பிறகு கோவில்பட்டியிலேயே வீடு எடுத்து தங்கி விடுவேன் என டிடிவி தினகரன் பரப்புரையில் தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று கரிசல்குளம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நீங்கள் என்னை தான் வெற்றி பெறச் செய்வீர்கள். ஆனால், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வாரந்தோறும் கோவில்பட்டிக்கு வந்து மக்களின் குறைகளை கேட்டறிவேன் என கூறினார். எனது … Read more

இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது திமுக தான் – டிடிவி தினகரன்

நேர்மையான, வெளிப்படையான ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நெல்லை, நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாடு எத்தனை பிரச்னைகளை சந்திக்கிறது, அத்தனைக்கும் பிள்ளையார் சுழிபோட்டது திமுக தான் என்று குற்றசாட்டியுள்ளார். காவிரி, முல்லை பெரியார், கச்சத்தீவு, நீட் தேர்வு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் திமுக தான் காரணம் என்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா … Read more

குளங்களை தூர் வாரினார்களோ இல்லையோ அரசு கஜானாவை தூர் வாரிவிட்டார் – டிடிவி தினகரன்

மக்கள் மற்றும் இயற்கையை பாதிக்கும் திட்டங்களை அனைத்தும் தமிழகத்தில் வந்ததற்கு காரணம் திமுக என்று டிடிவி தினகரன் குற்றசாட்டு. தேவகோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவை நம்பினால் யாராக இருந்தாலும் சாலையில் தான் நிற்க வேண்டும் என்றும் திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து அதிகரித்து விடும் எனவும் விமர்சித்துள்ளார். மக்கள் மற்றும் இயற்கையை பாதிக்கும் திட்டங்களை அனைத்தும் தமிழகத்தில் … Read more

பணமூட்டைகளுக்கு வாக்களித்து விடாதீர்கள் – டிடிவி தினகரன்

தமிழகத்தின் தலையெழுத்தை சரி செய்ய வேண்டுமானால் பணமூட்டைகளுக்கு வாக்களித்து விடாதீர்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் சின்னமனூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அரசியலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனக்கு அடையாளம் காட்டியது தேனி மாவட்டம். தஞ்சாவூர் எப்படி எனது சொந்த மாவட்டமோ, அதேபோன்று இதுவும் எனது சொந்த மாவட்டம் தான் என தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தலையெழுத்தை சரி செய்ய வேண்டுமானால் … Read more

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 23ம் தேதி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் சிவி சண்முகத்தை அவதூறாக பேசியதாக கூறி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தலில் வெற்றி பெற ரூ.200 கோடி பண மூட்டையை சிவி சண்முகம் நம்பி உள்ளதாக டிடிவி தினகரன் பேசியதாக கூறப்படுகிறது.

“அரசின் கஜானாவை காலி செய்த எடப்பாடி அரசு”- டிடிவி. தினகரன் குற்றச்சாட்டு!

நீர் நிலைகளை தூர்வாரினார்களோ இல்லையோ, அரசின் கஜானாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு நன்றாக தூர்வாரிவிட்டது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தொடங்கவுள்ளது. தேர்தல் தொடங்க இன்னும் 10 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியது. அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அமமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாமக்கல் … Read more

ஆட்சிக்கு வரப்போவதில்லை என அண்ணன் பழனிசாமிக்கு தெரியும் – டிடிவி தினகரன்

திமுக 10 ஆண்டுகளாக ஆட்சிக்கு வர முடியாமல் தவித்து வருகிறார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இலவச வாஷிங்மெஷின் போன்ற திட்டங்களை நிறைவேற்ற மாதந்தோறும் ரூ.5,000 கோடியும் வருடத்திற்கு 50 முதல் 60 கோடி ரூபாய் தேவைப்படும். பணத்திற்கு எங்கே செல்வார்கள் என்று கேள்வி எழுப்பி, வாஷிங்மேஷனில் வாஸ் பண்றதுக்கு கூட தண்ணீர் இல்லை என விமர்சித்துள்ளார். மீண்டும் ஆட்சிக்கு … Read more

இந்த இரு நாடுகளில் எனக்கு பெட்டிக்கடை கூட கிடையாது – கடம்பூர் ராஜூ

டிடிவி தினகரனிடம் கையெழுத்து வாங்க வேண்டுமானல் சிங்கப்பூருக்குதான் செல்ல வேண்டும் என்று கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், டிடிவி தினரகனுக்கு ஆதவராக தேர்தல் பரப்புரை செய்யும் அக்கட்சியின் தென்மண்டல அமைப்பாளர் மாணிக்கராஜா, எனக்கு சிங்கப்பூர், மலேசியாவில் ஹோட்டல்கள் இருப்பதாக மக்களிடம் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார். எனது சொத்து மதிப்பு குறித்த விவரங்களை வேட்புமனுவில் வெளிப்படையாக தெரிவித்துள்ளேன். எனவே … Read more

ருசி கண்ட பூனையைபோல் பதவி வெறி பிடித்து திமுகவினர் சுற்றுத் திரிகின்றனர் – டிடிவி தினகரன்

திமுக ஆட்சிக்கு வரும் சூழல் நிலவினால், மக்கள் ரோட்லகூட நடக்க முடியாது என்று டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார். திருச்சி முசிறியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஊழல் என்றால் திமுக பெயர் தான் ஞாபகம் வரும். விஞ்ஞான முறையில் ஊழல் செய்கிறது திமுக தான். ஆகையால், மறுபடியும் வாய்ப்பு கிடைக்குமா என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது தமிழகத்தில் சுமார் 6 லட்சம் கோடி கடன் உள்ளது. முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் … Read more