தேர்தல் அதிகாரிகள் புகார் – குஷ்பு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை ஆகிய 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு மீது கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி ஜெயராமன், மகன் பிரவீன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு.!

பொள்ளாச்சி ஜெயராமன், மகன் பிரவீன் உள்ளிட்ட 8 பேர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஒக்கிலிபாளையம் பகுதியில் திமுக பிரச்சாரத்தின் போது திமுக – அதிமுகவினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஜெயராமன் தூண்டுதலின் பேரில் கார் ஏற்றி கொலை செய்வதாக பிரவீன் மிரட்டியதாக திமுகவை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் உட்பட 8 பேர் மீது கொலை மிரட்டல் உட்பட … Read more

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 23ம் தேதி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் சிவி சண்முகத்தை அவதூறாக பேசியதாக கூறி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தலில் வெற்றி பெற ரூ.200 கோடி பண மூட்டையை சிவி சண்முகம் நம்பி உள்ளதாக டிடிவி தினகரன் பேசியதாக கூறப்படுகிறது.