உண்டியலில் இருந்த ரூபாய் 17 லட்சம்!!

தஞ்சை பெரிய கோயிலில் 11 உண்டியல்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் பரணிதரன், சிவராம்குமார் முன்னிலையில் நேற்று காலை திறந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது.  காலையில் துவங்கிய இப்பணி மாலை வரை நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.17,17,145 செலுத்தியிருப்பது தெரியவந்தது. மேலும் 27 கிராம் தங்கம், 113.2 கிராம் வெள்ளி, 292 வெளிநாட்டு நோட்டுகளை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.