சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் யூமா வாசுகிக்கு பாராட்டு…!!

கவிஞர், ஓவியர், எழுத்தாளர், “குதிரை வீரன் பயணம் சிற்றிதழின் ஆசிரியர், மொழிபெயற்ப்பாளர் என பன்முக ஆளுமையான யூமா வாசுகிக்கு 2017 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயற்ப்பிற்க்கான சாகித்ய அகாதமி விருது ”கசாக்கின் இதிகாசம்” என்னும் நூலினை மொழிபெயற்ப்பு செய்தமைக்காக கிடைத்திருக்கிறது. பாரதி புத்தகாலயம் நடத்திய புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணனும், மூத்த எழுத்தாளர் சா. கந்தசாமியும் யூமாவை கவுரவித்தார்கள்.

பெருமாள்முருகன் எழுதிய மாதொரு பாகன் ஆங்கில பதிப்பு சாகித்திய விருதை நிறுத்து: சென்னை உயர்நீதிமன்றம்…

எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய மாதொரு பாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‛ஒன் பார்ட் உமன்’ என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்குவதை ஜனவரி 8 ம் தேதி வரை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாதொருபாகன் என்னும் நாவலை எழுதியதற்காக எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு பல இன்னல்களை இந்த சமூக கட்டமைப்பும்,அரசியலும் கொடுத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.