பெருமாள்முருகன் எழுதிய மாதொரு பாகன் ஆங்கில பதிப்பு சாகித்திய விருதை நிறுத்து: சென்னை உயர்நீதிமன்றம்…

எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய மாதொரு பாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‛ஒன் பார்ட் உமன்’ என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்குவதை ஜனவரி 8 ம் தேதி வரை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாதொருபாகன் என்னும் நாவலை எழுதியதற்காக எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு பல இன்னல்களை இந்த சமூக கட்டமைப்பும்,அரசியலும் கொடுத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.