23 மீனவர்கள் இலங்கை போலிசாரால் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் ஓகி புயலின் தாக்கத்திற்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் 5 படகுகளுடன் 23 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இலங்கை போலீசார், மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி நள்ளிரவில் கைது செய்தனர். இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமில் வைத்துள்ளனர். கைது செய்து அவர்களை விசாரித்து வருவதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் மீண்டும் ‘தமிழக’ மீனவர்கள் மீது தாக்குதல்

 கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிவாழ் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும்  மீனவர்களின் மீன்பிடி வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களையும்  இலங்கை கடற்படையினர்  சேதப்படுத்தி உள்ளனர். இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக  கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் தொந்தரவால் மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரை திரும்பியுள்ளனர்.