இயக்குனர் பா.ரஞ்சித் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல்!

இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் ராஜ ராஜா சோழன் குறித்து அவதூறாக பேசியதாக, அவர் மீது திருப்பனந்தாள் காவல்நிலையத்தில், வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, பா.ரஞ்சித் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.