தனது தொகுதி மக்களுக்காக ஜீப்களை வழங்கிய ராகுல்காந்தி!

தனது தொகுதி மக்களுக்காக ஜீப்களை வழங்கிய ராகுல்காந்தி. கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள், அந்த தொகுதியின் குடும்ப சுகாதார மையத்திற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி 2 ஜீப்களை வழங்கி உள்ளார்.  மேலும் ஜீப்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், சுகாதார சேவைகள் அனைவருக்கும் சென்று சேருவதை உறுதி செய்யும் நோக்கிலும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.