#JustNow: கோயில் நிலத்தில் சந்தை – சீல் வைக்க உத்தரவு!

எடப்பாடியில் அறநிலையத்துறை வசம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்ட உழவர் சந்தைக்கு சீல். சேலம் மாவட்டம் எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயிலை சுற்றி அமைக்கப்பட்ட உழவர் சந்தைக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உழவர் சந்தை அமைப்பதற்கான ரூ.93 லட்சம் வழங்கப்படவில்லை என வழக்கு பதவி செய்யப்பட்ட நிலையில், சந்தைக்கு சீல் வைக்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ரூ.93 லட்சம் செலுத்தும் வரை உழவர் சந்தைக்கு சீல் வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.