சென்னை மாநகர போலீஸ் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டத்தை தொடக்கி வைத்த காவல் ஆணையர்!

சென்னை மாநகர போலீஸ் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டத்தை தொடக்கி வைத்த காவல் ஆணையர். பொதுவாக குற்றங்கள் நடக்கும் போதோ அல்லது புகார் சம்பந்தமான மற்ற காரியங்களுக்கோ, நாம் புகாரளிக்க காவல்நிலையத்தை நாடுவதுண்டு. அதனை எளிதாக்கும் வகையில், சென்னையில், போலீஸ் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை மாநகர போலீஸ் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்ட நிலையில், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இதனை தொடக்கி வைத்தார்.