18 குழந்தைகள் மரணம்… நொய்டா ஆலையில் உற்பத்தியை நிறுத்தியது மரியான் பயோடெக்!

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததையடுத்து நொய்டா ஆலையில்  உற்பத்தியை நிறுத்தியது மரியான் பயோடெக். மரியன் பயோடெக் நிறுவனம் தனது நொய்டா ஆலையில் அனைத்து உற்பத்திகளை நிறுத்துமாறு சி.டி.எஸ்.சி.ஓ-வின் விசாரணைக்குப் பிறகு உத்தரவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மரியன் பயோடெக் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் இறந்ததாக உஸ்பெகிஸ்தான் கூறியதை அடுத்து ஆலையில் ஆய்வு செய்யப்பட்டது. “DOC-1 MAX” என்ற இருமல் சிரப் தயாரிப்பதை நிறுத்திவிட்டதாக மரியன் நிறுவனம் முன்பு கூறியது. … Read more