18 குழந்தைகள் மரணம்… நொய்டா ஆலையில் உற்பத்தியை நிறுத்தியது மரியான் பயோடெக்!

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததையடுத்து நொய்டா ஆலையில்  உற்பத்தியை நிறுத்தியது மரியான் பயோடெக்.

மரியன் பயோடெக் நிறுவனம் தனது நொய்டா ஆலையில் அனைத்து உற்பத்திகளை நிறுத்துமாறு சி.டி.எஸ்.சி.ஓ-வின் விசாரணைக்குப் பிறகு உத்தரவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மரியன் பயோடெக் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் இறந்ததாக உஸ்பெகிஸ்தான் கூறியதை அடுத்து ஆலையில் ஆய்வு செய்யப்பட்டது.

“DOC-1 MAX” என்ற இருமல் சிரப் தயாரிப்பதை நிறுத்திவிட்டதாக மரியன் நிறுவனம் முன்பு கூறியது. இந்த நிலையில், நொய்டா ஆலையில் அனைத்து உற்பத்திகளையும் நிறுத்தியுள்ளது மரியன் பயோடெக் நிறுவனம். மருந்தில் இருந்த எத்திலீன் கிளைகோல் என்ற வேதிப்பொருள், குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் என ஆய்வில் தெரிவந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment